விலை கிடைக்கவில்லை என்பதால், தங்கள் கடின உழைப்பில் உருவானப் பொருட்களை வீணாக்குவது சரியா?
சமீபத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, ஆவின் நிறுவனத்திற்கு எதிராகப் பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது. அதன் படி பால் உற்பத்தியாளர்கள், பாலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டி சட்டியாக, கேன் கேனாக, லிட்டர் லிட்டராக பாலை சாலையில் ஊற்றித் தங்கள் எதிர்ப்பைக் காட்டினாரகள்.